Sri Paduka Sahasram - Paththati 18 - முக்தா பத்ததி (ச்லோகம் 626)
Paththati 18 - முக்தா பத்ததி
சிவத்வஹேதும் ஸகலஸ்ய ஜந்தோ: ஸ்ரோதோ விசேஷை: ஸுபகாம் அஸங்க்யை: முக்தா மயூகை: ஸுரஸிந்தும் அந்யாம் புஷ்ணாஸி ரங்கேச்வர பாதுகே த்வாம்
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னுடைய முத்துக்களின் ஒளி மூலமாக அனைத்து உயிர்களுக்கும் தூய்மையை அளிக்கிறாய், மங்களங்களை அளிக்கிறாய் (இதனையே, சிவனாய் இருக்கும் தன்மையை அடைவிப்பாய் என்று கூறுவர்). ஆக எண்ணற்ற அலைகள் வீசுகின்ற புதியதான ஒரு கங்கையை நீ திருவரங்கத்திலே உண்டாக்குகிறாய் போலும்.