Sri Paduka Sahasram - Paththati 16 - பஹுரத்ந பத்ததி (ச்லோகம் 554)
Paththati 16 - பஹுரத்ந பத்ததி
பத்த்நாஸி ரங்கபதி விப்ரம பாதுகே த்வம் மாயாகிராத மகுடேஷு நவபர்ஹமாலாம் ஆக்ருஷ்ட வாஸவ தநு: சகலை: மணீநாம் அந்யோத்ய ஸங்கடித கர்புரிதை: மயூகை:
ஸ்ரீரங்கத்தின் நாயகனான நம்பெருமாளின் பாதுகையே! ஒன்றுடன் ஒன்று இணைந்து பலவிதமான வானவில்லின் துணுக்குகள் போன்று உனது இரத்தினங்களின் ஒளி உள்ளது. இதனைக் காணும்போது, வேடன் போன்று வேஷம் பூண்ட சிவனின் தலையில் புதிய மயில்இறகு மாலையைக் கட்டுவதாக உள்ளது (அதாவது ஸ்ரீரங்கநாதனின் திருவீதிகளில் சிவன் வந்து வணங்கும்போது, அவன் தலையில் மயில்இறகு கட்டுவது போன்று பல வர்ணங்களுடன் இரத்தினங்களின் ஒளி படுகிறது).