Sriman Narayaneeyam - Dasaka 69 - ராஸ க்ரீடை - 5 (ச்லோகம் 699)

Dasaka 69 - ராஸ க்ரீடை - 5

தாவதேவ க்ருத மண்டநே கலித கஞ்சுலீக குசமண்டலே கண்ட லோல மணி குண்டலே யுவதி மண்டலேSத பரிமண்டலே அந்தரா ஸகல ஸுந்தரீ யுகளம் இந்திரா ரமண ஸஞ்சரஞ் மஞ்ஜுலாம் ததநு ராஸகேளிமயி கஞ்ஜநாப ஸமுபாததா: தாவத் ஏவ க்ருத மண்டநே கலித கஞ்சுலீக குச மண்டலே கண்ட லோல மணி குண்டலே யுவதி மண்டலே அத பரிமண்டலே அந்தரா ஸகல ஸுந்தரீ யுகளம் இந்திரா ரமண ஸஞ்சரஞ் மஞ்ஜுலாம் ததநு ராஸகேளிம் அயி கஞ்ஜநாப ஸமுபாததா: तावदेव कृतमण्डने कलितकञ्चुलीककुचमण्डले गण्डलोलमणिकुण्डले युवतिमण्डलेऽथ परिमण्डले । अन्तरा सकलसुन्दरीयुगलमिन्दिरारमण सञ्चरन् मञ्जुळां तदनु रासकेलिमयि कञ्जनाभ समुपादधाः

க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மஹாலக்ஷ்மியின் நாயகனே! அந்த நேரத்தில் கோபிகைகள் தங்களை நன்றாக அலங்காரம் செய்து கொண்டனர். தங்கள் ஸ்தனங்களில் ரவிக்கை அணிந்தும், காதுகளில் அணிந்த குண்டலங்கள் கன்னங்களில் வந்து ஆடும்படியாகவும் இருந்தனர். உன்னைச் சுற்றி அவர்கள் நின்றனர். அப்போது இரு கோபிகைகள் நடுவில் ஒரு க்ருஷ்ணன் என்று பலவாக நீ உருவெடுத்தாய். இப்படியாக நீ ராஸக்ரீடை என்னும் அந்த நாட்டியத்தைத் தொடங்கினாய்.