Sriman Narayaneeyam - Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம் (ச்லோகம் 570)

Dasaka 56 - காளியனுக்கு அனுக்ரஹம்

அயி புரைவ சிரயா பரிச்ருத த்வதநுபாவ விலீந ஹ்ருதோ ஹி தா: முநிபிரப்யநவாப்ய பதை: ஸ்தவை: நுநுவுரீச பவந்தமயந்த்ரிதம் அயி புரா ஏவ சிரயா பரிச்ருத த்வத் அநுபாவ விலீந ஹ்ருத: ஹி தா: முநிபி: அபி அநவாப்ய பதை: ஸ்தவை: நுநுவு: ஈச பவந்தம் அயந்த்ரிதம் अयि पुरैव चिराय परिश्रुतत्वदनुभावविलीनहृदो हि ताः । मुनिभिरप्यनवाप्यपथैः स्तवैर्नुनुवुरीश भवन्तमयन्त्रितम्

ஈசனே! குருவாயூரப்பா! காளியனின் மனைவிகள் உனது மகிமைகளை அறிந்தவர்களாக இருந்தனர். ஆகவே அவர்கள், முனிவர்கள் கூட உன்னை, அவ்வாறு துதிக்க இயலாதபடி, மிகவும் இயல்பாக, தடைகள் எதுவும் இன்றி உன்னைத் துதித்தனர்.