Sriman Narayaneeyam - Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம் (ச்லோகம் 159)
Dasaka 16 - தக்ஷப்ரஜாதிபதி வம்ச சரிதம்
தக்ஷ: விரிஞ்ச தநயோSத மநோஸ்தநூஜாம் லப்த்வா ப்ரஸூதிமிஹ ஷோடச சாப கன்யா: தர்மே த்ரயோதச ததௌ பித்ருஷு ஸ்வதாம் ச ஸ்வாஹாம் ஹவிர்புஜி ஸதீம் கிரிசே த்வதம்சே தக்ஷ: விரிஞ்ச தநய: அத மநோ: தநூஜாம் லப்த்வா ப்ரஸூதிம் இஹ ஷோடச ச ஆப கன்யா: தர்மே த்ரயோதச ததௌ பித்ருஷு ஸ்வதாம் ச ஸ்வாஹாம் ஹவிர்புஜி ஸதீம் கிரிசே த்வத் அம்சே दक्षो विरिञ्चतनयोऽथ मनोस्तनूजां लब्ध्वा प्रसूतिमिह षोडश चाप कन्याः । धर्मे त्रयोदश ददौ पितृषु स्वधां च स्वाहां हविर्भुजि सतीं गिरिशे त्वदंशे
க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ப்ரும்மாவின் புத்திரரான தக்ஷ ப்ரஜாதிபதி என்பவர் மநுவுடைய மகளான ப்ரஸூதி என்பவளை மணந்தார். அவள் மூலமாக பதினாறு பெண்களைப் பெற்றார். அந்தப் பெண்களில் பதின்மூன்று பெண்களை தர்ம தேவதைக்கு மணம் முடித்தார். (இந்தப் பெண்கள் - ச்ரத்தா, மைத்ரீ, தயா, சாந்தி, துஷ்டி, புஷ்டி, க்ரியா, உன்னதி, புத்தி, மேதா, திதிக்ஷா, ஹ்ரீ, மூர்த்தி ஆகியவர்கள்). ஸ்வதா என்பவளை அக்னி பகவானுக்கும், ஸதீ என்பவளை (இவளே தாக்ஷாயணி ஆவாள்) உன் அம்சமான சிவனுக்கும் மணம் செய்து கொடுத்தார் அல்லவா? (விளக்கம் காண்க)
ஸ்ரீமத்பாகவதத்தின் நான்காம் ஸ்கந்தத்தின் அத்யாயம் 1 ச்லோகம் 47 தொடங்கி, அத்யாயம் 4 ச்லோகம் 5 முடிய, இந்தத் தசகத்தில் கூறப்பட்டுள்ளன.