Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 58)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
பகவானுடைய ஆணையாகவும், ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் உள்ள கைங்கர்யங்களும் ப்ரபத்திக்கு அங்கம் அல்ல
மூலம் – இந்த யோஜநையில் அதிகாரமான ஆகிஞ்சந்யமும் “சோகியாதே கொள்” என்று தேற்றுகிற வாக்யத்தாலே ஸூசிதம். அநுவாத பக்ஷத்தில் தன் அசக்தியாலே கழிந்தவையொழிய, சக்யமாய்ச் செய்கிற ஆஜ்ஞாநுபாலநாதிகளும் ப்ரபத்தியில் துவக்கொண்ணா என்னுமிடம் “ஏக” சப்தத்திலே விவக்ஷிதமாகக் கடவது. இப்பக்ஷத்தில் “மா சுச:” என்கிற வாக்யம், “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்று உக்தமான அதிகாரத்தை வ்யக்தமாக்கிக் கொண்டு மேலுள்ள நிர்பரத்வாதிகளை முன்னிட்டு உத்தரகாலத்தில் இருக்கக் கடவபடியையெல்லாம் உபலக்ஷிக்கிறது.
– இவ்விதமாக “ஸர்வதர்மாந் பரித்யஜ்ய” என்பதற்குப் பொருள் கொள்ளும்போது, “சரணம் அடைவதற்கு வேறு எந்தவிதமான உபாயத்தையும் கைக்கொள்ளும் சக்தி இல்லாமல் உள்ளேன்” என்பதான ஆகிஞ்சந்யமானது, “மா சுச: - சோகம் அடையாதே” என்பதன் மூலம், ப்ரபத்திக்குரிய அதிகாரத்தை ஏற்படுத்துவதை அறியலாம். மாறாக “பரித்யஜ்ய” என்பது முன்பே நடந்த ஒன்றைக் கூறுவதாகக் கொண்டால் (அதாவது வேறு உபாயத்தைக் கைக்கொள்ள இயலாத நிலை என்பதைக் கூறுவதாகக் கொண்டால்), தன்னுடைய சக்திக்கு ஏற்ப இல்லாதவை என்று தள்ளப்பட்டவை தவிர பகவானுடைய கட்டளைகளாக உள்ளவை மற்றும் அவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டவை ஆகியவையும் ப்ரபத்தியுடன் சம்பந்தம் அற்றவை என்பதை “ஏக” என்னும் என்னும் சொல் கூறுகிறது. இப்படியாகப் பொருள் கொண்டால், “மா சுச:” என்பது, “பரித்யஜ்ய” என்ற சொல் மூலம் கூறப்பட்டதான ப்ரபத்திக்கான அதிகாரம் (தகுதி) மற்றும் ப்ரபத்திக்குப் பின்னர் எந்தவிதமான பாரமும் இல்லாமல் இருத்தல் போன்றதான ப்ரபந்நனுடைய கைக்கொள்ளவேண்டிய தன்மைகளையும் கூறுவதாகிறது.