Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 101)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
இதில் வைகாரிகத்தில் நின்றும் ச்ரோத்ர த்வக் சக்ஷுர் ஜிஹ்வா க்ராணங்களென்கிற ஜ்ஞாநேந்த்ரியங்களைந்தும், வாக் பாணி பாத பாயூபஸ்த்தங்களென்கிற கர்மேந்த்ரியங்க ளைந்தும், மநஸ்ஸுமாகிற பதினோரிந்த்ரியங்களும் பிறக்கும்.
(இதில், வைகாரிகத்தில் நின்றும்) இத்யாதி. அதாவது, இப்படி த்ரிவிதமான அஹங்காரத்தில் வைகாரிகமாவது ஸாத்விக அஹங்காரமாகையாலே, இதில் நின்றும், ஸத்வ கார்யமான லகுத்வ ப்ரகாசத்வங்களையுடைத்தான இந்த்ரியங்கள் பதினொன்றும் பிறக்கும் என்கை. வைகாரிகத்தில் நின்றும் ஏகாதசேந்த்ரியங்களும் பிறக்குமென்று சொல்லி விடாதே, (ச்ரோத்ர த்வக் சக்ஷுர் ஜிஹ்வா க்ராணங்களென்கிற ஜ்ஞானேந்த்ரியங்க ளைந்தும், வாக் பாணி பாத பாயு உபஸ்த்தங்களென்கிற கர்மேந்தரியங்களைந்தும், மநஸ்ஸும் ஆகிற பதினோரிந்த்ரியங்களும்) என்று இப்படி அருளிச் செய்தது, இவற்றினுடைய கார்ய பேதத்தையும், ஸம்ஜ்ஞா பேதத்தையுமொழிய, இவற்றினுடைய ஸ்வரூப பேதமும், வ்யவஹார பேதமும் தோற்றாதென்று. மநஸ்ஸுககு கார்யம் உபய ஸஹகாரித்வம். அதுதான் இவ்விடத்தில் சொல்லாதொழிந்தது, மேலே இவை தன்னை விஸ்தரேண சொல்லுகிறவிடத்திலே சொல்லுகிறோமென்று. இந்த்ரியங்கள் ஸாத்விக அஹங்கார கார்யமென்று அருளிச்செய்கையாலே, இவற்றை ராஐஸ அஹங்கார கார்யமென்கிற பக்ஷம் ப்ரதிக்ஷிப்தம். – “தைஜஸாநீந்த்ரியாண்யாஹுர் தேவா வைகாரிகா தச, ஏகாதசம் மநச்சாத்ர தேவா வைகாரிகாஸ் ஸ்ம்ருதா:” என்றும், “அக்நிர் வாக் பூத்வா முகம் ப்ராவிசத் வாயுர் க்ராணோ பூத்வா நாஸிகே ப்ராவிசத்; ஆதித்யச் சக்ஷுர் பூத்வா அக்ஷிணீ ப்ராவிசத்; திசச் ச்ரோத்ரம் பூத்வா கர்ணௌ ப்ராவிசத்; ஓஷதி வநஸ்பதயோ லோமாநி பூத்வா த்வசம் ப்ராவிசத்; சந்த்ரமா மநோ பூத்வா ஹ்ருதயம் ப்ராவிசத்; ம்ருத்யுரபாநோ பூத்வா நாபிம் ப்ராவிசத்; ஆபோ ரேதோ பூத்வா சிச்நம் ப்ராவிசத்” என்கிறபடியே, தேவாதிஷ்டிதங்களாகையாலே, தேவ சப்த வாச்யங்களான இந்த்ரியங்கள் பதினொன்றும் ராஜஸ அஹங்கார கார்யமென்பர்கள சிலர், ஸாத்விக அஹங்கார கார்யமென்பர்கள் சிலர் என்று சொல்லி, அதில் ஸாத்விகாஹங்கார கார்யமென்கிறதே ஸ்வபக்ஷமாக ஸ்ரீபராசர பகவான் நிச்சயிக்கையாலே, இவர்க்கு இப்படி அருளிச் செய்யக் குறையில்லையிறே. இந்த்ரியங்கள் பதினொன்று என்கிற நியமமும் வ்யஷ்டி விஷயமன்று, ஸமஷ்டி விஷயம். “தேஷாந்த்வவயவாந ஸூக்ஷ்மாந் ஷண்ணாமப்யமிதௌஜஸாம், ஸந்நிவே ச்யாத்ம மாத்ராஸு ஸர்வபூதாநி நிர்மமே” என்று அணுக்களாகையாலே ஸூக்ஷ்மங்களான இந்தரியங்களினுடைய அம்சங்களை ஆத்மமாத்ரைகளிலே ப்ரவேசிப்பித்து ஸர்வ பூதங்களையும் ஈச்வரன் ஸ்ருஷ்டித்தானென்று மநு வசநமுண்டாகையாலே. இதில் (ஸூக்ஷ்மாந்) என்கையாலே, “அணவச்ச” என்கிற ஸூத்ர மர்யாதையாலே இந்த்ரியங்கள் அணுவென்றும்; (அவயவாந்) என்கையாலே இந்த்ரியங்கள்தோறும் வ்யக்தி பாஹுள்யமுண்டென்றும்; ஆத்ம மாத்ரைகளிலே கூட்டினான் என்கையாலே, அடியிலே கொடுத்த இந்த்ரியங்களே யாவத்ஸம்ஸாரம் அநுவர்த்திக்குமென்றும்; “சரீரம் யத் அவாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீச்வர:, க்ருஹீத வைதாநி ஸம்யாதி வாயுர் கந்தா நிவாசயாத்” என்கிறபடியே, சரீரத்தை விட்டு சரீராந்தரத்தை ப்ரவேசிக்கும்போது இந்த்ரியங்களை க்ரஹித்துக் கொணடு போமென்றும் தோற்றுகிறது. (ஷண்ணாம்) என்றும், (மநஷ்ஷஷ்ட்டாநி) என்றும் சொலலுகிற ஸங்க்யா நிர்தேசத்தில் நிர்பந்தமில்லை; இந்த்ரியாந்தரங்களும் கூடிப் போகையாலே.
(இதில், வைகாரிகத்தில் நின்றும்) - இப்படியாக மூன்றுவிதமாக உள்ள அஹங்காரத்தில், வைகாரிக அஹங்காரமானது ஸாத்விக அஹங்காரம் ஆகிறது. எனவே, இதிலிருந்து, ஸத்வகார்யமாகிய சிறிதான ப்ரகாசங்களைக் கொண்டதான பதினோரு இந்த்ரியங்கள் பிறக்கின்றன. ஆனால், “வைகாரிகத்திலிருந்து பதினோரு இந்த்ரியங்கள் பிறக்கும்” என்று நேரடியாகக் கூறாமல், “ச்ரோத்ர த்வக் சக்ஷுர் ஜிஹ்வா க்ராணங்களென்கிற ஜ்ஞானேந்த்ரியங்க ளைந்தும், வாக் பாணி பாத பாயு உபஸ்த்தங்களென்கிற கர்மேந்தரியங்களைந்தும், மநஸ்ஸும் ஆகிற பதினோரிந்த்ரியங்களும்” என்று ஏன் அருளிச்செய்தார்? இதற்கு விடை அருளிச்செய்கிறார். அதாவது நேரடியாக அருளிச் செய்தால், இந்திரியங்களில் உள்ள கார்ய வேறுபாடுகள் மற்றும் பெயர் வேறுபாடுகள் மட்டுமே வெளிப்படும் அல்லாமல், அவற்றுடைய ஸ்வரூப வேறுபாடுகள் மற்றும் செயலாற்றுதலில் உள்ள வேறுபாடுகள் வெளிப்படாது என்பதால் ஆகும். மனமானது, ஞானேந்த்ரியங்கள் மற்றும் கர்மேந்த்ரியங்கள் ஆகிய இரண்டிற்கும் உதவுவது ஆகும். அதனை இங்கு ஏன் கூறவிலை என்றால், இந்த்ரியங்கள் குறித்து அடுத்து விரிவாக அருளிச்செய்ய உள்ளதால் ஆகும். “இந்த்ரியங்கள் அனைத்தும் ஸாத்விக அஹங்காரத்திலிருந்து வெளிப்பட்டவை ஆகும்”, என்று கூறுவதன் மூலம், “இவை ராஜஸ அஹங்காரத்தின் வெளிப்பாடு” என்று கூறும் கருத்தானது மறுக்கப்பட்டது. மேலும், ஸ்ரீ. விபு. (1-2-47) - தைஜஸாநி இந்த்ரியாணி ஆஹு: தேவா வைகாரிகா தச | ஏகாதசம் மநச்சாத்ர தேவா வைகாரிகாஸ் ஸ்ம்ருதா: - இந்திரியங்கள் அனைத்தும் தைஜஸம் (ஒளி எனலாம்) எனப்படும், பத்து இந்த்ரியங்களும் வைகாரிகா எனப்படும், மனம் பதினொன்றாவது ஆகும், இவை தேவதைகளால் புகப்பட்டதால் “தேவ” என்னும் சப்தத்தால் கூறத்தக்கதாக – என்றும், ஐதரேய உபநிஷத் (2-1-4) - அக்நிர் வாக் பூத்வா முகம் ப்ராவிசத்; வாயுர் க்ராணோ பூத்வா நாஸிகே ப்ராவிசத்; ஆதித்யச் சக்ஷுர் பூத்வா அக்ஷிணீ ப்ராவிசத்; திசச் ச்ரோத்ரம் பூத்வா கர்ணௌ ப்ராவிசத்; ஓஷதி வநஸ்பதயோ லோமாநி பூத்வா த்வசம் ப்ராவிசத்; சந்த்ரமா மநோ பூத்வா ஹ்ருதயம் ப்ராவிசத்; ம்ருத்யுரபாநோ பூத்வா நாபிம் ப்ராவிசத்; ஆபோ ரேதோ பூத்வா சிச்நம் ப்ராவிசத் – அக்னி வாக்காக மாறி முகத்தை அடைந்தான், வாயு முகரும் இந்த்ரியமாக மாறி மூக்கை அடைந்தான், சூரியன் பார்வையாக மாறி கண்ணை அடைந்தான், திசையின் அபிமானி தேவதையானவன் கேட்கும் இந்த்ரியமாக மாறி செவியை அடைந்தான், செடிகள் மற்றும் கொடிகள் தங்களுடைய அபிமான தேவதைகளாக மாறி மரங்களும் முடியும் என்றாகி தொடு இந்த்ரியங்களை அடைந்து நின்றன, சந்த்ரன் மனமாக மாறி இதயத்தை அடைந்தான், யமன் அபான வாயுவாக மாறி நாபியை அடைந்தான், நீரானது ரேதஸ்ஸாகி மாறி மர்மக்குறியை அடைந்தது - என்றும் கூறுவதற்கு ஏற்ப, “இந்த்ரியங்கள் அனைத்தும் தேவதைகளால் ப்ரவேசிக்கப்பட்ட தாகின்றன. எனவே தேவர்கள் என்ற சொல்லின் பொருளான இந்த்ரியங்கள் பதினொன்றும், ராஜஸ அஹங்காரத்தின் வெளிப்பாடு என்று சிலர் கூறுவர், ஸாத்விக அஹங்காரத்தின் வெளிப்பாடு என்றும் சிலர் கூறுவர்”, என்று உரைத்து, “அவை அனைத்தும் ஸாத்விக அஹங்காரத்தின் கார்யமே ஆகும்” என்பதே தனது கருத்தாக ஸ்ரீபராசரபகவான் அருளிச்செய்ததால், இவரும் இங்கு அதனைத் தனது கருத்தாகவும் கூறியதில் தவறில்லை. “இந்த்ரியங்கள் பதினொன்று ஆகும்” என்னும் விதிமுறையும், தனித்தனியாக படைப்பு விஷயம் அல்ல, தொகுத்த படைப்பு விஷயம் ஆகும்; மநுஸ்ம்ருதி (1-16) - “தேஷாந்த்வவயவாந ஸூக்ஷ்மாந் ஷண்ணாமப்யமிதௌஜஸாம், ஸந்நிவே ச்யாத்ம மாத்ராஸு ஸர்வபூதாநி நிர்மமே - மிகுந்த தேஜஸ் கொண்ட ஆறு இந்த்ரியங்களைக் காட்டிலும் ஸூஷ்மமான தந்மாத்ரைகளில் தனது மாற்றங்களைச் சேர்த்து, அனைத்து பூதங்களையும் ஈச்வரன் ஸ்ருஷ்டி செய்தான் - என்று மதுவின் வசனம் உள்ளதால் ஆகும். மேலே உள்ள “ஸூக்ஷ்மாந்” என்பதன் மூலம், ப்ர. ஸூ (2-4-6) - அணவ: ச – இந்த்ரியங்களும் அணு அளவே ஆகும் - என்பதன் விளைவாக, இந்த்ரியங்கள் அணு அளவே எனப்பட்டது. “அவயவாந்” என்பதன் மூலம், இந்த்ரியங்களிடம் பல பெயர்கள் உண்டு எனப்பட்டது. “ஆத்ம மாத்ரைகளில் கூட்டினான்” என்பதன் மூலம், ஜீவாத்மாக்களுக்கு முதலில் அளிக்கப்பட்ட இந்த்ரியங்களானவை, ஸம்ஸாரம் உள்ள காலம் முடிய தொடரும் எனப்பட்டது. கீதை. (15-8) - சரீரம் யத் அவாப்நோதி யத் ச அபி உத்க்ராமதீச்வர: || க்ரஹீத்வைதாநி ஸம்யாதி வாயுர் கந்தாநிவாசயாத் - காற்றானது எவ்விதம் மலர்களிடம் உள்ள நறுமணத்தைக் கவர்ந்து செல்லுமோ அது போன்று, உயிர் பிரிந்த பின்னர், ஜீவன் தன்னுடன் இவை அனைத்தையும் (இந்த்ரியங்கள்) எடுத்துச் செல்கிறான் - என்பதன் மூலம், ஒரு சரீரத்தை விட்டு அடுத்த சரீரத்தில் புகும்போது இந்த்ரியங்களை எடுத்துச் செல்கிறான் என்பது வெளிப்படுகிறது. “ஷண்ணாம், மந: ஷஷ்ட்டாநி” என்று கூறும் கணக்கின் எண்ணிக்கையில் எந்த ஒரு கட்டாயமும் இல்லை; மற்ற இந்த்ரியங்களும் சேர்ந்து செல்வதால் ஆகும்.