Acharya Hridayam - தனியன்கள் (Thaniyan 2)

தனியன்கள்

பொதுத் தனியன்கள்

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுந மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்

(ஸ்வாமி கூரத்தாழ்வான் அருளிச்செய்தது) மஹாலக்ஷ்மியின் நாயகனான ஸர்வேச்வரன் முதலாகவும்; நாதமுனிகள், ஆளவந்தார் ஆகியோர் நடுவாகவும்; என்னுடைய ஆசார்யன் இறுதியாகவும் உள்ள ஆசார்ய பரம்பரையை நான் வணங்குகிறேன்.